காந்தர்வன்
மணியும், மீனாவும் காதலர்களாக இருந்துப் பிரிந்து விட்ட நிலையில், தன் நண்பன் பாண்டியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறான். ''மீனாவை நீ மறந்துவிட்டதாக சொல்வது பொய். அவளை உன் உடம்பிலும், மனசிலும் இன்னும் நீ சுமந்து கொண்டிருக்கிறாய்'' என்று பாண்டி சொல்கிறான். ''இல்லை'' என்று மறுக்கிறான் மணி. ''உன் பிறந்த நாள் அன்று மீனா வாங்கிக் கொடுத்த டிரெஸ்ஸைத்தான் நீ இப்போது அணிந்து கொண்டிருக்கிறாய்'' என்று பாண்டி சொன்னதும் டூ வீலரை நிறுத்திய மணி, தன் டிரெஸ்ஸைக் கழற்றி, அதை தீ வைத்துக் கொளுத்துகிறான். ''இந்த டிரெஸ் எரிவது போல் அவளையும் எரிக்கிறேன் பார்'' என்று சவால் விடுகிறான். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் தன் தந்தையுடன் வரும் மீனா ஜட்டியுடன் நிற்கும் மணி, தன்னை எரித்து விடுவேன் என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள். இப்படியொரு காட்சி "காந்தர்வன்' படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் மணியாக கதிரும், மீனாவாக செளந்தர்யாவும், அவரது தந்தையாக தயாரிப்பாளர் ஆண்டமுத்துவும், பாண்டியாக ரமேஷ் பாண்டியும் நடித்தனர். "தாமரை மூவீஸ்' வழங்க, "செளத் இந்தியன் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பில் வி.ஏ.ஆண்டமுத்து, பி.கே.தர்மராஜ் - கோவிந்தராஜ் ஆகியோருடன் இணைந்து நிறைய பொருட்செலவில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். கரண் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கை துரை இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார். "நிறம்' என்ற படத்தில் கதாநாயகனாகவும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "நாளை நமதே' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவருமான கதிர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் சினிமாவுக்காக தன் பெயரை செளந்தர்யா என்று மாற்றிக்கொண்டு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், ஜே.எம்.எஸ்.துரை, கதாநாயகயின் தந்தையாக தயாரிப்பளார் ஆண்ட முத்து ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்குனர் சலங்கை துரை படம் பற்றி கூறும்போது, ''இது ஒரு காதல் கதைதான். ஆனால் வழக்கமான காதலாக இருக்காது. காதலை புதிய கோணத்தில் சொல்ல வருகிறேன். இந்தப் படத்தை பார்க்கும் இளம் பெண்கள் பலர் இப்படத்தின் கதாநாயகனைப் போல நமக்கு காதலன் இருக்கக் கூடாது என்று நினைப்பார்கள். அந்தளவுக்கு வெறுக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் கதாநாயகன் பாத்திரம் அமைந்திருக்கும்'' என்றார். ஒளிப்பதிவு : அனில் கே. சேகர், இசை : அலெக்ஸ் பால், படத்தொகுப்பு : எஸ்.எம்.வி.சுப்பு, கலை : எம்.ராஜதுரை, நடனம் : சிவசங்கர், தினா, பாடல்கள் : வாலி, விவேகா, முத்துவிஜயன்.GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.