Pages

Saturday, April 3, 2010

'மீனாவை நீ மறந்துவிட்டதாக சொல்வது பொய்..

காந்தர்வன்

-

மணியும்,​​ மீனாவும் காதலர்களாக இருந்துப் பிரிந்து விட்ட ​ நிலையில்,​​ தன் நண்பன் பாண்டியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறான்.​ ''மீனாவை நீ மறந்துவிட்டதாக சொல்வது பொய்.​ அவளை உன் உடம்பிலும்,​​ மனசிலும் இன்னும் நீ சுமந்து கொண்டிருக்கிறாய்'' என்று பாண்டி சொல்கிறான்.​ ''இல்லை'' என்று மறுக்கிறான் மணி.​ ​ ​​ ''உன் பிறந்த நாள் அன்று மீனா வாங்கிக் கொடுத்த டிரெஸ்ஸைத்தான் நீ இப்போது அணிந்து கொண்டிருக்கிறாய்'' என்று பாண்டி சொன்னதும் டூ வீலரை நிறுத்திய மணி,​​ தன் டிரெஸ்ஸைக் கழற்றி,​​ அதை தீ வைத்துக் கொளுத்துகிறான்.​ ''இந்த டிரெஸ் எரிவது போல் அவளையும் எரிக்கிறேன் பார்'' என்று சவால் விடுகிறான்.​ அப்போது அந்த வழியாக ஆட்டோவில் தன் தந்தையுடன் வரும் மீனா ஜட்டியுடன் நிற்கும் மணி,​​ தன்னை எரித்து விடுவேன் என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறாள்.​ இப்படியொரு காட்சி "காந்தர்வன்' படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்டது.​ இதில் மணியாக கதிரும்,​​ மீனாவாக செளந்தர்யாவும்,​​ அவரது தந்தையாக தயாரிப்பாளர் ஆண்டமுத்துவும்,​​ பாண்டியாக ரமேஷ் பாண்டியும் நடித்தனர்.​ ​ "தாமரை மூவீஸ்' வழங்க,​​ "செளத் இந்தியன் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பில் வி.ஏ.ஆண்டமுத்து,​​ பி.கே.தர்மராஜ் -​ ​ கோவிந்தராஜ் ஆகியோருடன் இணைந்து நிறைய பொருட்செலவில் ​ இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.​ கரண் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிய "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கை துரை இப்படத்தின் கதை,​​ திரைக்கதை,​​ வசனம் எழுதி இயக்கி வருகிறார்.​ ​​ "நிறம்' என்ற படத்தில் கதாநாயகனாகவும்,​​ "நெஞ்சத்தைக் கிள்ளாதே',​ "நாளை நமதே' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவருமான கதிர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.​ கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் சினிமாவுக்காக தன் பெயரை செளந்தர்யா என்று மாற்றிக்கொண்டு இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.​ இவர்களுடன் ராஜ்குமார்,​​ ஜே.எம்.எஸ்.துரை,​​ கதாநாயகயின் தந்தையாக தயாரிப்பளார் ஆண்ட முத்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.​ இயக்குனர் சலங்கை துரை படம் பற்றி கூறும்போது,​​​ ''இது ஒரு காதல் கதைதான்.​ ஆனால் வழக்கமான காதலாக இருக்காது.​ காதலை புதிய கோணத்தில் சொல்ல வருகிறேன்.​ இந்தப் படத்தை பார்க்கும் இளம் பெண்கள் பலர் இப்படத்தின் கதாநாயகனைப் போல நமக்கு காதலன் இருக்கக் கூடாது என்று நினைப்பார்கள்.​ அந்தளவுக்கு வெறுக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் கதாநாயகன் பாத்திரம் அமைந்திருக்கும்'' என்றார்.​ ஒளிப்பதிவு :​ அனில் கே.​ சேகர்,​​ இசை :​ அலெக்ஸ் பால்,​​ படத்தொகுப்பு :​ எஸ்.எம்.வி.சுப்பு,​​ கலை :​ எம்.ராஜதுரை,​​ நடனம் :​ சிவசங்கர்,​​ தினா,​​ பாடல்கள் :​ வாலி,​​ விவேகா,​​ முத்துவிஜயன்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.