Pages

Friday, April 2, 2010

மனைவி - 3 குழந்தைகள் பிணம்..........


தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டை அடுத்த கருக்காடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(30). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா(26). இவர்களுக்கு அனு (3 1/2), ஆர்த்தி(2) என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆறுமுகமும், உமாவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை தனக்கு ஆண் குழந்தை இல்லாததால் உமாவின் தங்கை வானதியை 2-வதாக திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஆறுமுகம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகன் மணிகண்டன் பிறந்த பின்னர் வரதட்சணை கேட்டு உமாவை ஆறுமுகம், கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் தினமும் ஆறுமுகத்தின் சித்ரவதையை உமா சந்தித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை உமா, வீட்டுக்குள்ளேயே தனது மூன்று குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உமாவின் தம்பி புண்ணியமூர்த்தி, தனது அக்காள் மற்றும் 3 குழந்தைகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உமாவின் தாய் பிச்சையம்மாள், ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி, ஏட்டு குமரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஒரத்தநாடு போலீசார் உமா, மற்றும் 3 குழந்தைகளின் பிணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது ஆறுமுகத்திற்கு வேறொரு பெண் எழுதிய ஏராளமான காதல் கடிதங்கள் சிக்கியது.
மேலும் ஆறுமுகம் காலை 10 மணிக்கு வீட்டை விட்டு சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மனைவி- 3 குழந்தைகளை கொன்று தூக்கில் போட்டு விட்டு தப்பி சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்துக்கு ஆறுமுகம் சென்றுள்ளார். அங்கு தனது சைக்கிள், செல்போன், ஆடைகளை கழற்றி விட்டு புது வேட்டி- சட்டை அணிந்துள்ளார். அதன் பின்னர் அங்குள்ள உரக்கடைக்கு சென்று பூச்சிமருத்தை (விஷம்) வாங்கி சென்றுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் மனைவி- 3 குழந்தைகளை கொன்று விட்டோமே என்று பயந்து தற்கொலை செய்ய விஷத்தை வாங்கினாரா அல்லது வேறு எங்காவது தற்கொலை செய்து ஆறுமுகம் உடல் கிடக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே தாய்- 3 குழந்தைகள் இறந்துள்ளதால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

1 comments:

பத்மா said...

ஆமாம் சார் காலையில் இந்த செய்தியை படித்துவிட்டு அழுதேன் . அந்த நடுவில் உள்ள குழந்தையின் முகத்தை பாருங்கள் .யாருக்காவது கொல்ல மனம் வருமா? கடவுளே

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.