Pages

Sunday, April 4, 2010

மலிக்கிற்கு ஐதராபாத்தை விட்டு வெளியேற தடை...


ஐதராபாத் : ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷாவை ஏற்கெனவே திருமணம் செய்த புகார் தொடர்பாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை முடியும்வரை ஐதராபாத்தை விட்டு அவர் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே தனது மகள் ஆயிஷாவை மாலிக் திருமணம் செய்ததாக அவரது தந்தை சித்திக் புகார் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இதனிடையே, திடீரென ஐதராபாத் வந்த மாலிக், திருமண நடவடிக்கைகள் குறித்து சானியா மிர்சாவின் பெற்றோரிடம் விவாதித்தார். இந்நிலையில், ஏற்கெனவே திருமணம் ஆன புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி 5 கோடி ரூபாய் தர மாலிக் முன்வந்ததாக சித்திக் நேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக போலீசில் அவர் புகார் தெரிவித்தார். ஐதராபாத்தில் சானியா மிர்சா வீட்டில் தங்கியுள்ள சோயிப் மாலிக்கிடம் சித்திக் புகார் குறித்து போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், விசாரணை முடியும் வரை ஐதராபாத்தை விட்டு அவர் வெளியேறக்கூடாது என்று அவருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

1 comments:

Unknown said...

நடப்பது நடக்கட்டும். வேடிக்கை பார்போம்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.