துபாயில் பொது இடத்தில் முத்தம் கொடுத்ததால் சிறை தண்டனை பெற்ற பிரிட்டன் இளஞ்ஜோடிகளின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காதல் ஜோடி அய்மன் நஜாபி (24), சார்லோட் (25). அய்மன் நஜாபி துபாயில் ஹே குரூப் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சார்லோட் லண்டனில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார்.
காதலரை பார்க்க சார்லோட் துபாய் வந்திருந்தார். இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது இருவரும் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு அருகில் 38 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் தனது 2 வயது மகளுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார்.
ஜோடிகள் முத்தமிடுவதை தனது சின்னஞ்சிறு மகள் பார்த்துவிட்டாள் என்றும், இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி அந்த பெண்மணி போலீசில் புகார் கொடுத்து விட்டார்.
இந்த புகாரின் பேரில் இங்கிலாந்து ஜோடியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துபாய் சட்டப்படி பொது இடத்தில் முத்தம் கொடுத்தது தவறு என தீர்ப்பானது.
இதனால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இளஞ்ஜோடிகளுக்கு எதிராக நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க முடியாது என பிடிவாதமாக கூறியது இங்கிலாந்து காதல் ஜோடி. இதையடுத்து இருவரின் பாஸ்போர்ட்டை போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
‘நாங்கள் உதட்டில் முத்தம் கொடுக்கவில்லை. கன்னத்தில் தான் முத்தம் கொடுத்துக் கொண்டோம். அன்பை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தோம்’ என எவ்வளவோ வாதாடியும், அவர்களின் மனுவை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
ஏற்கனவே விதித்த தீர்ப்பின் படி ஒரு மாத சிறை வாசமும், ஆயிரம் திர்காம் அபராதமும் செலுத்தி தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, செக்ஸியான எஸ்எம்எஸ் அனுப்பிய இந்திய தம்பதியர் மற்றும் கடற்கரையில் செக்ஸ் வைத்துக்கொண்ட பிரிட்டன் ஜோடி ஆகியோர் துபாயில் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.