Pages

Sunday, April 4, 2010

ரூ.5 கோடி வரை தருவதாக சோயிப் பேரம்....


சானியாவை திருமணம் செய்ய இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மீது, அவருடைய முதல் மனைவி என்று கூறிக்கொள்ளும் ஆயிஷாவின் தந்தை முகமது சித்திக் மோசடி புகார் கொடுத்து இருக்கிறார்.

ஆயிஷாவுடன் திருமணம் நடந்ததை சோயிப் ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டது.

ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாராஹில்ஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சோயிப் மீது மோசடி, வரதட்சணை கொடுமை, கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் இக்பால் சித்திக் இந்த தகவலை உறுதி செய்தார். ஆனால், உண்மை நிலைமை என்ன என்று ஆராய்ந்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சோயிப் தவிர, அவருடைய மைத்துனர் இம்ரான் ஜாபர் பெயரும் சித்திக்கின் புகாரில் இடம் பெற்றுள்ளது. சோயிப்புக்கு எதிராக புகார் கொடுக்கக்கூடாது என்று தங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் வந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். சித்திக் மேலும் கூறியதாவது:

"பாகிஸ்தானில் உள்ள வக்கீல் மூலம் சோயிப்புக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில், விவாகரத்துக்காக பணம் எதுவும் வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. என் மகள் ஆயிஷாவுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் அல்லது அவளுடன் திருமணம் நடைபெற்றதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

கடந்த 2002 ம் ஆண்டு ஜுன் 2 ந்தேதி அன்று நடைபெற்ற திருமண ஒப்பந்தத்தின் மூலம், தற்போதைய சட்டப்படி ஆயிஷாதான் சோயிப்பின் முதல் மனைவி. அவர் திருமணம் செய்ய இருக்கும் சானியா 2 வது மனைவிதான்.

பாகிஸ்தான் சட்டப்படி முதல் மனைவியின் சம்மதம் இன்றியோ அல்லது அவருக்கு விவாகரத்து வழங்காமலோ 2 வது திருமணம் செய்தால் 1 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் இடம் உள்ளது. இவ்வாறு சித்திக் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் திருமணம் தொடர்பான குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதற்கு ரூ.5 கோடி வரை தருவதாக சோயிப் பேரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

சித்திக் கொடுத்த புகாரை தொடர்ந்து, சோயிப் மாலிக்கை கண்காணிப்பதற்காக அவர் தங்கி இருக்கும் சானியாவின் வீட்டிற்கு முன்பு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.