Pages

Sunday, April 4, 2010

திருமணத்தை துபாயில் நடத்துவது குறித்து....

ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இன்று திடீரென ஐதராபாத் வருகை தந்துள்ளார். திருமணம் குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மாலிக்-சானியா திருமணம் நடைபெற இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், ஆயிஷா என்ற பெண், மாலிக்குடன் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களது திருமணம் நடைபெறுவது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென சோயிப் மாலிக் இன்று ஐதராபாத் வருகை தந்தார். தமது திருமண ஏற்பாடுகள் குறித்து சானியா மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தங்களது திருமணத்தை துபாயில் நடத்துவது குறித்தும் மாலிக் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. சோயிப் இன்று ஐதராபாத் வருகை தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.