தமிழ்சினிமாவின் பிள்ளையார் சுழி போலாகிவிட்டது மதுரை. கக்கூஸ் சந்தில் ஆரம்பித்து கள்ளழகர் ரவுண்ட்ஸ் வரைக்கும் மதுரையையே கொத்து பரோட்டாவாக்கிவிட்டார்கள் பல இயக்குனர்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு மதுர பக்கமே போக மாட்டேன் என்று டைரக்டர் அமீர் ஓப்பனாக புலம்புகிற அளவுக்கு இந்த பரோட்டாவின் நெடி ஓவராகதான் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் தமிழ்சினிமாவை தஞ்சாவூருக்கு தள்ளிக் கொண்டு போயிருக்கிறார் சற்குணம். ஒரத்தநாடு, மன்னார்குடி பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும் படமான களவாணியின் இயக்குனர்! தஞ்சை மாவட்டத்து சொற்களை முழுமையா பயன்படுத்திய படம் தமிழ்ல இன்னும் வரல. அந்த குறையை என்னோட படம் போக்கும் என்று அவர் துவங்கியதுதான் தாமதம். பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள் நிருபர்கள். தமிழுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எதுவும் சேர்க்காம பேசுதறதே தஞ்சை மாவட்டத்து மக்கள்தான். அவங்களுக்குன்னு என்ன ஸ்லாங் இருக்கு?ன்னு ஆரம்பிக்க, விளக்குகிறேன் பேர்வழின்னு டைரக்டர் சொன்ன விளக்கம் இருக்கே, அது தஞ்சாவூர் விளைச்சலுக்கு சற்றும் குறையாதது. ஒருவழியாக படத்தின் நாயகன் விமலையும், நாயகி ஓவியாவையும் பேச வைத்தார்கள். பசங்க படத்தில் வரும் 'இங்கிட்டு மீனாட்சி'தான் இந்த விமல். முதல் படம் ஹிட் ஆன பிறகு நிறைய கதைகள் வரும். ஆனால் அவசரப்பட்டு ஒப்புகிட்டா அம்புட்டுதான் வாழ்க்கைன்னு சசிக்குமார் கொடுத்த அட்வைஸ் விமலுக்கு ரொம்பவே யூஸ்புல்லா இருந்திருக்கு. இரண்டாவது படத்துக்காக நிறைய படங்களை வேண்டாம்னு ஒதுக்கிட்டு காத்திருந்த போதுதான் களவாணி கிடைச்சுதாம். "படத்துல செம ரவுசு பண்ணியிருக்கேன்" என்றார் விமல். ஹீரோயினுக்கு ஹெலன்ங்கிற ஒரிஜனல் பேரை ஓவியான்னு மாத்தினதோட இல்லாம நல்ல தமிழையும் கற்று கொடுத்திருக்கிறார் டைரக்டர் சற்குணம். இவங்க பேசுறதை பார்த்தா, தமிழ் சினிமாவை மதுரையிலேர்ந்து மீட்டெடுத்து தஞ்சாவூர் பஸ்ல ஏத்திவிட்ருவாங்க போலிருக்கு! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.