Pages

Thursday, May 6, 2010

தமிழ் படத்துக்கு மும்பை நடிகைகள் ஏன்? : குஷ்பு!



ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் படம் ‘வெளுத்து கட்டு’. சேனாபதிமகன் இயக்குகிறார். பரணி இசை அமைக்கிறார். புதுமுகங்கள் கதிர், அருந்ததி ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. முதல் சிடியை விஜய் வெளியிட குஷ்பு பெற்றார்.

பின் குஷ்பு பேசும்போது, ‘ஒருவர் படம் தயாரிக்க விரும்பினால் உடனே தெரிந்த வடநாட்டு நடிகை யாராவது இருக்கிறாரா, வேற்று மொழி நடிகை இருக்கிறாரா என்றுதான் தேடுகிறார்கள். தமிழ்நாட்டில், தமிழ் பேசும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தலாம். அப்படிப்பட்ட அருந்ததி என்ற பெண்ணைத்தான் இதில் நாயகியாக்கி இருக்கிறார் சந்திரசேகரன். ராதா, சரிதா என இருவரையும் ஒன்றாக பார்த்ததுபோல் இருக்கிறார் அருந்ததி’ என்றார்.

விஜய் பேசும்போது, ‘எப்போதுமே ஓடுகிற குதிரையில் ஏறி என்னுடைய அப்பா சவாரி செய்யமாட்டார். அவரே ஒரு குதிரையை தயார் செய்து அதில்தான் சவாரி செய்வார். விஜயகாந்த், ரகுமான், சிம்ரன் நான் என பல ஸ்டார்களை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போதுகூட புதுமுகத்தை வைத்துதான் படம் தயாரிக்கிறார். எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது அவர்தான். எனக்கு ஏதாவது பிரச்னை என்றால் அவர்தான் தீர்த்து வைப்பார்’ என்றார். விழாவில் ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன், அபிராமி ராமநாதன், கே.முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, காஜாமைதீன், வி.சி.குகநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

2 comments:

Anonymous said...

vote enga podurathu??!
ummada thalaiyila?

Bala said...

soryda.

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.