நடிகை திரிஷாவுக்கு சமூக சேவைபணிகளில் ஈடுபாடு அதிகம். ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழைகளுக்கு ஓசையில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். புற்று நோய் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெறும் அடையாறு ஆஸ்பத்திரிக்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நேரில் சென்று துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் வழங்கி உணவும் பரிமாறுகிறார்.
நேற்று தனது பிறந்த நாளையொட்டி திருவேற் காட்டில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு சென்றார். அவருடன் தாய் உமா கிருஷ்ணன், மற்றும் நெருங்கிய தோழிகளும் சென்றனர். காலையில் இருந்து பல மணி நேரம் அந்த குழந்தைகளுடன் பேசி செலவிட்டார். 400 குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கினார்.
பின்னர் உதவும் கரங்கள் இல்லத்தில் இருந்து 2 ஆதரவற்ற குழந்தைகளைதத்து எடுத்தார். அதில் ஒன்று பெண் குழந்தை, மற்றொன்று ஆண் குழந்தை. பெண் குழந்தைக்கு லேசாக மனவளர்ச்சி குன்றி இருந்தது. பிறர் தத்து எடுக்க விரும்பாத குழந்தைகளை தத்து எடுக்க விரும்புகிறேன். அவர்களை காட்டுங்கள் என்று உதவும் கரங்கள் நிர் வாகிகளிடம் கூறி இவ்விரண்டு குழந்தைகளை தத்தெடுத்தார்.
திரிஷாவை பார்த்து அவருடன் சென்ற தோழியும் ஒரு குழந்தையை தத்தெடுத்தார்.
திரிஷா கடைசியாக நடித்து ரிலீசான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வெளியான நமோ வெங்கடேசா படமும் சூப்பர் ஹிட் தற்போது அக்ஷய் குமார் ஜோடியாக “காட்டா மீட்டா” இந்தி படத்தில் நடித்து வருகிறார். கமல் ஜோடியாக “யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
GIF animations generator gifup.com
1 comments:
தத்து எடுப்பது இவ்வளவு சுலபமா? நாங்கள் இரண்டு வருடமாக முயற்சிக்கிறோம், இன்னும் முடியவில்லை.
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.