Pages

Wednesday, May 5, 2010

புலிகள் பற்றிய பாடல்!


உணர்வோடு வைக்கப்பட்ட பாடலா, அல்லது விளம்பரத்துக்காகவா? தெரியவில்லை. தம்பி அர்ஜுனா படத்தில் ஒரு பாடல்! புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது நரிகள் ஆட்டம் போடுமே, நரிகள் வேஷம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே... யுகபாரதி எழுதியிருக்கும் வரிகள் ஒவ்வொன்றும் அக்னியாக ஜொலித்தது. படத்தின் இயக்குனர் விஜய் ஆர் ஆனந்திடமே இது பற்றி கேட்டோம்.
படத்தில வர்ற ஒரு சுச்சுவேஷனுக்கான பாடல்தான் இது. இப்படி ஒரு வரிகளை கேட்ட எவரும் சென்சார்ல எப்படிங்க அனுமதிப்பாங்க என்று கேட்கிறாங்க. நமது தேசிய விலங்கே புலிதானே? வீரத்தை பற்றி எழுதும்போது புலிகள் என்ற வார்த்தையில்லாமல் எப்படி எழுத முடியும் என்றார். ஆனால் ஒரு விஷயத்தை அவரால் மறைக்க முடியவில்லை. இந்த வரிகளை கேட்டுட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் நிறைய பேர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாங்க. ஏராளமான பாராட்டுகளும் கிடைச்சுது. வரிகளுக்கு பொருத்தமா இசையமைச்ச தினாவையும் இந்த இடத்தில பாராட்டணும் என்றார்.
ஆபாவாணன், தினா, ஷங்கர் மகாதேவன் மூவரும் பாடியிருக்கும் இநத் பாடல் உலகம் முழுக்கவே ஒரு எழுச்சியை உருவாக்கும் போலதான் தெரிகிறது.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.