
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பக்கத்திலே இருக்கிற சின்ன கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்க அம்மா கூட என்னை உருப்பட மாட்டான் என்றுதான் திட்டுவாங்க. அந்தளவுக்கு நான் பொறுக்கியா அடங்காதவனா சுத்திகிட்டு இருந்தேன். அந்த வயசில நான் செஞ்ச குறும்புகளைதான் வெளுத்துக்கட்டுங்கிற படமா எடுத்திருக்கேன் என்றார் எஸ்.ஏ.சி.
முதல் ஆடியோவை விஜய் வெளியிட, குஷ்பு பெற்றுக் கொண்டார். படத்தின் ஹீரோ கதிர், ஹீரோயின் அருந்ததி இருவருக்குமே தமிழ் மண்தான். அதிலும் மதுரைக்கு பக்கத்திலிருக்கிற ஏதோ ஒரு பட்டிதான் அருந்ததிக்கு சொந்த ஊர். மனசெல்லாம் தந்தியடிக்க, நம்ம ஊரு தமிழில் அருந்ததி பேசியது அழகோ அழகு. (மும்பை சுந்தரிகளின் நுனி நாக்கு ஆங்கிலத்தை தொடர்ந்து கேட்டவர்களுக்கு புரியும் இந்த சுச்சுவேஷன்) "மேடையில விஜய் சாரு இருக்காரு. எனக்கு உடம்பெல்லாம் வைப்ரேஷன் ஓடுது. என்ன பேசுறதுண்ணே புரியல" என்று அவர் தவித்த தவிப்பை பார்க்கணுமே. அதுவே ஒரு வைப்ரேஷன்தான் போங்க....
விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கரண்ட் ஆஃப்! ஆனாலும் விடாமல் அவர் மைக்கில் பேசிக் கொண்டிருக்க அவரது முகம் இருட்டில் சரிவர தெரியாததால் கூச்சலிட்டார்கள் ரசிகர்கள். கரண்ட் இல்ல. அதுக்காக என்ன பண்றது என்றவர் தொடர்ந்து பேசி முடித்துவிட்டுதான் இருக்கையில் அமர்ந்தார்
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.