Pages

Saturday, May 8, 2010

ஆளில்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவது?




சுறா 50 நாளை கடப்பானா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது விஜய் வட்டாரம். கரையோரத்தில் துடிக்கிற மீனை கட்டி இழுத்து வந்தாவது காப்பாற்றுவோம் என்று இமேஜுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிலையில் படம் ஓடும் திரையரங்கங்களை அப்படியே கைவசம் வைத்திருக்க இன்னொரு ஐடியா செய்திருக்கிறதாம் சன் நிறுவனம்.



50 வது நாள் போஸ்டருக்காக மட்டும் சில தியேட்டர்களை விட்டுவிட்டு சுறா ஓடும் மற்ற தியேட்டர்களில் சிங்கம் படத்தை திரையிட முடிவெடுத்திருக்கிறார்களாம். எல்லா தியேட்டர்களிலும் சுறாவை ஓட்ட ஆசைதான் தியேட்டர்காரர்களுக்கு. ஆனால் ஆளில்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவது? அதனால் படத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று சன்னிடம் சொல்லப் போக, அதற்கு பதிலாக சிங்கத்தை தருகிறோம் என்று கூறியிருக்கிறார்களாம்.



இம்மாதம் 28 ந் தேதி சிங்கம் திரைக்கு வருவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் அவ்வளவு டிலே பண்றீங்க. 21 ந் தேதியே வாங்க என்று வற்புறுத்துகிறார்களாம் விநியோகஸ்தர்கள். GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.