Pages

Saturday, May 8, 2010

ரெட்டச்சுழி இயக்குனருக்கு

தமிழ் ஊடகப்பேரவையும், சாப்ஃப்ட்வியூ நிறுவனமும் இணைந்து சென்னையில் நடத்திய புகைப்பட கண்காட்சியில் நக்கீரன் ஆசிரியர் கோபால், வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன், மற்றும் ரெட்டச்சுழி இயக்குனர் தாமிரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புகைப்பட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



விழாவில் பேசிய நக்கீரன் கோபால், "பாரதிராஜா, பாலசந்தர் என்ற இரண்டு சிங்கங்களை வைத்து படம் எடுத்தவர் தாமிரா" என்று கூறியதுடன், குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படம் எடுத்ததற்காக தாமிராவுக்கு தன்னுடைய பாராட்டுதல்களை சால்வை அணிவித்து தெரிவித்துக் கொண்டார். புகைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய கோபால், நாற்பது ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சந்தன வீரப்பனை முதன் முதலாக போட்டோ எடுத்து நக்கீரனில் வெளியிட்டது பற்றியும், தற்போது சிறையிலிருக்கும் நித்யானந்தா விவகாரத்தில் தாம் வெளியிட்ட புகைப்படங்களின் முக்கியத்துவம் பற்றி சுவையாகவும் மாணவர்கள் ஆர்வத்தோடு கவனிக்கும்படியும் பேசினார்.



வந்திருந்த அனைவருக்கும் சாப்ட்வியூ நிறுவனர் மா.ஆன்ட்டோ பீட்டர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

2 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

For Blogger Tips

www.vandhemadharam.blogspot.com

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.