Pages

Saturday, May 8, 2010

சல்மான்கான், ஷாருக்கான்...

நின்னு காட்டணும் என்ற வெறியோடு படம் எடுக்க வருகிறவர்கள் கூட, முதல்ல நின்னாதானே காட்றதுக்கு என்கிற அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகி, வேறு தொழிலுக்கு இடம் மாறுகிற சூழ்நிலைதான் இப்போது. ஆனால் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களை எடுத்து இன்டஸ்ட்ரிக்கே இனிப்பை கொடுக்கிறார் கல்பாத்தி அகோரம். முதல் படமே வெற்றிப்படமான திருட்டுப்பயலே. அதன்பின் மாசிலாமணி, கந்தக்கோட்டை என்று ஆவரேஜ் தூரல்தான் அவரது காட்டில்!.



இப்போது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, மதராச பட்டினம், அவன் இவன் என்று வளர்ச்சி கிராப்ஃபில் கொஞ்சம் ஏற்றம். இந்த நம்பிக்கை நட்சத்திரம் இப்போது இந்திக்கும் நகரப் போகிறதாம்.



ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் துக்கமாகவும் தகவலை பரிமாறிக் கொள்கிறது கோடம்பாக்கம். சல்மான்கான், ஷாருக்கான் என்று பாலிவுட்டுக்கு போய் பணத்தை கொட்டினால், இங்கே இவரை நம்பியிருக்கிற இயக்குனர்களின் கதி என்னாவது என்ற கவலைதான் இந்த துக்கத்திற்கு காரணம். ஆனால், இந்திக்கு போனாலும் தமிழ் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்கிறது கல்பாத்தி வட்டாரம்.

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.