Pages

Sunday, May 2, 2010

ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆபரேஷன்



இங்கிலாந்தில் லைசெஸ்டர் நகரில் உள்ள கிளென்பீல்டு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர் ஆன்ட்ரே.
இவர் இருதய நோயாளி ஒருவருக்கு ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் ஆபரேஷன் செய்தார். அவர் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்து இந்த ஆபரேஷனை செய்தார்.
இதன் மூலம் ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் செய்வதற்கு ஆபரேஷன் தியேட்டரில் சர்ஜன் டாக்டர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வெளியூரில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கூட டாக்டர்கள் ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் ஆபரேஷன் செய்ய முடியும்.
இந்த ஆபரேஷன் 70 வயதான இங்கிலாந்து நாட்டுக்காரருக்கு செய்யப்பட்டது.
இதய துடிப்பு சீராக இல்லாமல் இருந்ததற்காக இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. ஒரு மணிநேரத்தில் அவரது இதயத்துடிப்பு சீரானது.
ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் ஆபரேஷன் செய்வது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கிறது என்றபோதிலும் அது கர்ப்பப்பை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்ற நோய்களுக்கான ஆபரேஷன்களில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் முறையாக அதை பயன்படுத்தி இதய நோய் ஆபரேஷனை டாக்டர் ஆன்ட்ரே செய்து இருக்கிறார். ரிமோட் கண்ட்ரோல் ரோபோட் மூலம் முதன் முதலில் இதய ஆபரேஷன் செய்த டாக்டர் ஆன்ட்ரே தான்.
இந்த ஆபரேஷனை செய்யும் போது நான் என் அறையில் ரிலாக்சாக உட்கார்ந்து கொண்டு ரொம்ப ஜாலியாக இந்த ஆபரேஷனை செய்தேன்.
வழக்கமாக ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்யும் போது டாக்டர்கள் கனமான ஓவர்கோட் போன்ற பாதுகாப்பு சாதனங்களை அணிந்து இருக்க வேண்டும். இந்த ஆபரேஷனுக்கு இது போன்ற சாதனங்கள் எல்லாம் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார் ஆன்ட்ரே.


GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.