இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு மணிக்கு வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்று உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த தேர்தலில், அதிபர் ராஜபக்ஷே கூட்டணி, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூட்டணி, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியக் கூட்டணியாக உள்ளது. தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலே நகரில் நடந்த வன்முறையை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திரிகோணமலை மாவட்டத்தில் இரு இடங்களில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், மிரட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.