Pages

Thursday, April 8, 2010

6 ஆசனங்கள் பெற்று தமிழரசுக் கட்சி முன்னணி !

» யாழ். மாவட்டத்தில் அதிகாலை நிலைவரம் 6 ஆசனங்கள் பெற்று தமிழரசுக் கட்சி முன்னணி ! ஆளும் கட்சிக்கு 02; ஐ.தே.கட்சி ஓர் ஆசனம்

2010-04-09 06:05:02

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முன்னணியில் உள்ளதாக இன்று அதி காலை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. நேற்று மாலை ஆரம்பமான வாக்கு எண்ணும் பணிகள் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது.


யாழ்ப்பாணம், ஏப். 09
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முன்னணியில் உள்ளதாக இன்று அதி காலை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
நேற்று மாலை ஆரம்பமான வாக்கு எண்ணும் பணிகள் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது.
பிந்திய தகவலின்படி தமிழரசுக் கட்சி போனஸ் உட்பட ஆறு ஆசனங்களையும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டுஆசனங்க ளையும் ஐ.தே. கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன என தேர்தல் அலுவலக வட்டாரங்களில் இருந்து அறியமுடிந்தது.
உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலையே வெளியாகும் எனத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா உட்பட இரண்டு ஈ.பி.டி.பி. யினரே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் காணப்பட்டன என் றும் அதிகாலைத் தகவல்கள் தெரிவித்தன. GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.