Pages

Saturday, April 24, 2010

"பிரசாந்த்தை வேறு டைரக்டர்களுடன் வொர்க் பண்ண விடுங்களேன்"

'மம்பட்டியான்' படத்தின் பிரஸ்மீட். இதுவரைக்கும் நாலு முறை சந்திச்சிட்டோம். மீராஜாஸ்மினை கண்ணிலேயே காட்டலயே சார் என்று டைரக்டர் தியாகராஜனிடம் கேட்டோம். இவர் வேறு யாரோ தியாகராஜன் அல்ல. நம்ப பிரசாந்தின் அப்பாவேதான். குறுகுறு கேள்விதான். அதற்காக திருதிருவென்று முழிக்கிறவரா அவர்? "இது மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக்குங்கறதால படப்பிடிப்பை சென்னையில வைக்கல. வச்சிருந்தா அவங்கள பார்த்திருக்கலாம். இப்ப என்ன கெட்டு போச்சு. இன்னும் ஒரு வாரத்தில ஆடியோ ரிலீஸ். வருவாங்க. நல்லா பார்த்துக்கோங்க" என்றார்.
தியாகராஜன் சொன்ன ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இது. வேற்றுமைன்னு கூட எடுத்துக்கலாம். மலையூர் மம்பட்டியான் என்று அந்த படத்துக்கு பேரு வச்சிருந்தோம். (1983 களில் வந்த படம் அது. தியாகராஜன்தான் அதில் ஹீரோ) ஆனா, மலையூர்ல ஒரு ஷாட் கூட எடுக்கலே. இந்த படத்துக்கு மம்பட்டியான் என்று பேரு வச்சிருக்கோம். ஆனா, மலையூர்ல ஷ§ட்டிங் வச்சேன் என்றார். காதல் படங்களாக நடித்துக் கொண்டிருக்கும் பிரசாந்த், இந்த படத்தில் ஆக்ஷன் முகம் காட்டுகிறார்.
வின்னர் படத்திற்கு பிறகு பிரசாந்தும், வடிவேலுவும் கலந்து கலக்குற படம் இது. மறுபடியும் நினைச்சு நினைச்சு சிரிக்கிற காமெடியா இருக்கும் என்றார் தியாகராஜன். "பிரசாந்த்தை வேறு டைரக்டர்களுடன் வொர்க் பண்ண விடுங்களேன்" என்ற பத்திரிகையாளர்களின் விமர்சனத்திற்கு தியாகராஜன் சொன்ன பதில், மைல் கணக்கில் நீளும் என்பதால் சுருக் என்று சொல்லிவிடுகிறோம்.
படத்தை எடுக்கிறாங்க. கடைசியில் ரிலீசுக்கு வந்து எங்ககிட்டதான் நிக்கிறாங்க. வாங்குன சம்பளத்தையும் இழந்துதான் அந்த படத்தை நாங்க ரிலீஸ் பண்ணி கொடுக்க வேண்டியதா இருக்கு. தனியா நின்று தில்லா ரிலீஸ் பண்ற தயாரிப்பாளரும், டைரக்டரும் கொடுங்க. நடிச்சிட்டு போகட்டும்... என்றார் சற்றே கோபத்துடன்!
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

1 comments:

marumalarchi said...
This comment has been removed by the author.

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.