22 மணிநேர இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக நடிகை ஷில்பா ஷெட்டி தனது தூக்கத்தை இழந்தார். ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான ‘ஜரா நாச் கே திக்கா’வின் நடுவராக உள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. ஏராளமான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இருந்து சிறப்பாக நடனம் ஆடுபவர்களை தேர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஷில்பா ஷெட்டி இடைவிடாது 22 மணி நேரம் நடந்த படப்பிடிப்பு காரணமாக தனது தூக்கத்தை இழக்க நேரிட்டது. இது பற்றி ஷில்பா தனது இணையதள பிளாக்கில் எழுதியிருப்பதாவது:
‘ஜரா நாச் கே திக்கா’ ஷூட்டிங் தொடங்கியது. அனைத்து கலைஞர் களையும் திரும்பவும் ஒருங்கிணைக்க முடியாது என்பதாலும் இரண்டு எபி சோடுகளை ஷூட் செய்ய வேண்டி யிருந்ததால் தொடர்ந்து 22 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது.எங்கள் வாழ்க்கை மற்றவர்கள் திரையில் பார்ப்பது போல் நன்றாக இருப்பது இல்லை.ஆனால் தூக்கமின்றி பணியாற்றியது பற்றி நான் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. போட்டியாளர்களின் திறமைகளை பார்த்த போது இதற்காக தூக்கத்தை தொலைத்தது பரவாயில்லை என்று நான் நினைத்தேன். இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.