Pages

Monday, April 26, 2010

கண் கலங்கினார் சானியா:சோயிப்மாலிக் ஆத்திரம்



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கிற்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் சமீபத்தில் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் பாகிஸ்தான் சென்றனர். சோயிப் மாலிக் கின் சொந்த ஊரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்தியாவில் இருந்து வந்துள்ள உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சோயிப் மாலிக் நாளை (27-ந் தேதி) சிறப்பு விருந்து கொடுக்கிறார். லாகூரில் உள்ள பியர்ல் காண்டி நெண்டல் நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஓட்டலில் தங்குவதற்காக நேற்று மாலை சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் வந்தனர். அப்போது நிருபர்கள், போட்டோ கிராபர்களால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சானியா மிர்சா தள்ளி விடப்பட்டார். இதனால் அவர் கண் கலங்கினார். இந்த சம்பவத்தால் சோயிப் மாலிக் கடும் ஆத்திரம் அடைந்தார்.

தொலைக்காட்சி காமிரா மேன்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், எல்லா தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள், போட்டோ கிராபர்களை வெளியேற்றியது.

திருமண வரவேற்பை படம் பிடிக்க விரும்பினால் ரூ.3 1/2 கோடி தர வேண்டும் என்று சோயிப் மாலிக் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்த தொலைக்காட்சி சானலும் சோயிப் மாலிக் விதித்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள வில்லை.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.