Pages

Sunday, April 18, 2010

இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான்' என்று நொந்துபோகும் பெண்களா நீங்கள்?


அழகா இருக்குது... மனசை ஈர்க்குது...
"வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய கஷ்டம் ஏதாவது வந்துவிட்டால், `இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான்' என்று நொந்துபோகும் பெண்களா நீங்கள்? மனதொடிந்து போகாதீர்கள். அந்த கஷ்டம் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தொடக்கத்தை ஏற்படுத்துவதற்கான பிள்ளையார்சுழியாக இருக்கும்!''- என்கிறார் வாசுகி மணிவண்ணன்.
இவர் அழகுக்கலை நிபுணர். பெண்களின் கூந்தலில் விதவிதமான பூக்கள், மணிகள், இலைகள், பழங்கள், ரிப்பன்கள் போன்றவைகளை இணைத்து அலங்காரப் படுத்துவதில் சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்.
சரி.. இவருக்கு வந்த சோதனை என்ன என்பதை முதலில் கேட்போம்..
"நான் பிளஸ்-டூ படித்திருக்கிறேன். 19 வயதில் திருமணம் நடந்தது. வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டதால் புடவை வியாபாரம் செய்யத் தொடங்கினேன். மும்பைக்கு போய் புடவைகளை வாங்கிவந்து, இரு சக்கர வாகனத்தில் வைத்து சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வேன். ஓரளவு சம்பாதிக்க முடிந்தது. வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இரண்டு குழந்தை களும் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்ததால் இரவு 11 மணிக்குத்தான் சமையல் செய்வேன். சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு 12 மணிக்கு மேல் ஆகிவிடும். தினமும் வியாபாரம் முடிந்து வந்ததும், புடவைகளை எல்லாம் கட்டி வீட்டின் அருகில் உள்ள கடையில் வைத்து விடுவோம். நான் இரவில் எத்தனை மணிக்கு தூங்கினாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
அன்று என்ன நடந்ததோ தெரியாது. காலை 9 மணிவரை தூங்கிக் கொண்டிருந்தேன். என் மகன் கடை திறந்து கிடப்பதாகக் கூறினான். ஓடிப்போய் பார்த்தால், அத்தனை புடவைகளையும் திருடர்கள் அள்ளிக்கொண்டு போயிருந் தார்கள். 15 வருடங்களுக்கு முன்பு இது நடந்தது. புடவை களின் அப்போதைய மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய்.
நான் மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டேன். அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. என் நிலையைப் பார்த்த என் கணவர், மனநிலையில் தெளிவு ஏற்பட வேண் டும் என்பதற்காக அழகுக்கலை கல்வி பயில என்னை அனுப்பினார். ஆர்வத்தோடு அதைக் கற்றேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் புதிய தொடக்கம் ஏற்பட்டது''-என்கிறார், வாசுகி.
இவரது குடும்பத்திற்கு ஆடை வடிவமைப்பது பாரம்பரிய தொழில் என்பதால், இயல்பிலே கலை ஆர்வம் இருந்திருக்கிறது. யாருக்கு எந்த மாதிரியான நிறங்கள் பொருந்தும் என்பதும் இயற்கை யாகவே இவருக்கு புரிந்திருக்கிறது. சிறுவயதிலே ஓவியம் வரைவதிலும், புதுமாதிரியான பொருட்களை வடிவமைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.
"நான் புடவை வியாபாரம் நடத்தும்போது அதை அபிவிருத்தி செய்வதற்காக வங்கியில் ஒரு லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். நான் எல்லாவற்றையும் திருட்டுக் கொடுத்துவிட்டு, எதிர் காலத்தைப் பற்றிய கேள்விக்குறியோடு இருந்தபோது, அந்த வங்கி மேலாளர் ஆய்வுக்கு வந்திருந்தார். நடந்ததைக் கூறியதும், அவர் என்னை ஆறுதல்படுத்தி விட்டு, `கலங்காதீர்கள். பிïட்டி கோர்ஸ் முடித்ததும் கடன் தருகிறேன். பார்லர் வையுங்கள்' என்றார். கடன் கிடைத்தது. பார்லர் வைத்தேன்''- என்று தான் வாழ்க்கையில் வளர்ந்த பின்னணியை விளக்குகிறார்.
அழகுக் கலை போட்டிகளில் கலந்துகொண்டு விருது, பரிசுகளை வாங்கிக் குவித்த இவர், மணப்பெண் மற்றும் வளைகாப்பு நடத்தும் பெண்களுக்கு ஜடை போடுவதில் தன் முழுத் திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்.
"மணப் பெண்களுக்கு ஜடை அலங்காரம் செய்வது தமிழ் கலாசாரத்தின் முக்கிய அம்சம். ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு மணப் பெண்களில் சிலர் தலையை விரித்துப் போடத் தொடங்கினார்கள். அதற்கு `ப்ரி ஹேர்' என்றொரு பெயரை வைத்துக்கொண்டு அதுதான் முகூர்த்த நேரத்து பேஷன் என்றார்கள். சிலர் சும்மா பெயருக்கு ஒரு போனி டைல் போட்டால் போதும் என்றனர். அதைக் கேட்டதும் நம்ம கலாசாரம் எங்கே போகிறது என்று எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
எல்லோரிடமும் முகூர்த்தத்திற்கு ஜடை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்வது வேலைக்கு ஆகாது என்பது எனக்கு தெரிந்தது. ஜடை போட்டுக்கொண்டால் அழகு எப்படி அதிகரிக்கும் என்பதை செய்து காட்டினால் தானாகவே அவர்களுக்கு அதில் ஆர்வம் வந்துவிடும் என்பதை புரிந்து, புதுப்புது ஜடை அலங்காரங்களை உருவாக்கத் தொடங்கினேன். மணப்பெண்களை விதவிதமாக அலங்கரித்தேன். அதைப் பார்த்து நிறைய பெண்களுக்கு ஜடை அலங்காரத்தில் ஆர்வம் வந்துவிட்டது''

புதிய புதிய ஜடை அலங்காரங்களை எப்படி உருவாக்குகிறீர்கள்?
"நான் கற்றது என்பது குறைவுதான். அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு நானே புது மாதிரிகளை உருவாக்கினேன். அதற்கு தேவையான பொருட்களை கண்டறிய இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். பூக்கள், இலைகள், மணிகள் போன்றவை எங்கு தரமாக அழகாக கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவைகளை வாங்கி என் கற்பனைக்கு தகுந்தபடி கோர்த்து விதவிதமாக அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறேன்.
மணப்பெண்கள் முதலிலே அவர்களது பட்டுப்புடவை, ஜாக்கெட் டிசைன், வாங்கியிருக்கும் புதிய நகை டிசைன் போன்றவைகளை எல்லாம் என்னிடம் காட்டிவிடுவார்கள். அதற்கு பொருத்தமாக நான் கூந்தல் அலங்காரத்தை செய்வேன். உடை, ஆபரண டிசைன்களுக்கு தகுந்தபடி ஜடையை யும் டிசைன் செய்வேன். மணப்பெண்ணின் சருமம், முக அமைப்பு, உடல் அளவு போன்ற வைகளையும் முதலிலே பார்த்து அதற்கு பொருத்தமாக ஜடை அலங்காரம் செய்ய வேண்டும்''
இப்போது நிறைய பெண்கள் கூந்தலை குட்டையாக வெட்டிவிடுகிறார்களே! அவர்களுக்கு நீளமான கூந்தல் அலங்காரம் செய்வது எப்படி?
"இப்போது கூந்தலை வெட்டிக்கொள்வதை குறை சொல்ல முடியாது. பராமரிக்க நேரம் இல்லை. முன்பெல்லாம் சுற்றுப்புற சூழல் நன்றாக இருந்தது. வாரத்தில் ஒரு முறை கூந்தலை கழுவிவிட்டால் போதும். இப்போது மாசு, புகை அதிகம். வாரத்தில் மூன்று நாட்கள் கழுவ வேண்டியதிருக்கிறது. அதனால் அவர்களால் பராமரிக்க ஏற்றபடி கூந்தலை வெட்டி வடிவமைத்துக்கொள்ளலாம்.

திருமணத்திற்கு ஜடை அலங்காரம் செய்யும் போது சவுரி முடியை தேவையான அளவு சேர்த்து அலங்காரம் செய்துகொள்ளலாம். சில பெண்கள் என்னிடம் `நீங்கள் கூந்தல் அலங்காரம் செய்தால், தோழிகள் எல்லாம் பின்னால் வந்து நின்று ஜடை அழகைத்தான் அதிக நேரம் பார்த்து ரசிக்கிறார்கள்' என்பார்கள். எல்லோரும் பார்த்து ரசித்து, நமது கூந்தல் அலங்கார கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதை சிரத்தையுடன் செய்து, என் திறமைகளை காட்டுகிறேன்''
முகூர்த்த ஜடை அலங்காரத்திற்கும், வளைகாப்பு ஜடை அலங்காரத்திற்கும் என்ன வித்தியாசம்?
"மணப் பெண்ணை நன்றாக அலங்காரம் செய்துவிட்டோம் என்றால், அந்த கல்யாண மண்டபமே அழகானது போல் மாறிவிடும். அந்த அலங்காரத்தை பெண் மட்டுமின்றி கணவரும் ரசிப்பார். நேர்த்தியான அழகுதான் மனதுக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உடல்ரீதியாக அவ்வப்போது சோர்ந்து போவார்கள். அவர்கள் சோர்வை விரட்டவும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்கும் விதத்திலும் மல்லிகைப் பூ, உலர்ந்த பழவகைகள், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள், பழங்களை வைத்து அலங்காரம் செய்வோம். அதன் மணமும், குணமும் தாய்க்கும், சிசுவுக்கும் நல்லது. இந்த ஜடை அலங்காரம் செய்துகொண்டால் வளைகாப்பு முடிந்து ஒரு வாரம் வரை அந்தப்பெண்ணின் கூந்தலில் ரம்மியமான இயற்கை வாசனை வீசிக்கொண்டே இருக்கும்''
கூந்தல் அலங்காரத்தில் சாதனை செய்வதில் வாசுகிக்கு அளவற்ற ஆர்வம்.
"முதலில் 27 அடி நீள அலங்கார கூந்தலை உருவாக்கினேன். தற்போது லிம்கா சாதனைக்காக 75 அடி நீள கூந்தலை உருவாக்கியிருக்கிறேன். அதன் அலங்கார இணைப்புகள் மற்றும் உழைப் பையும் சேர்த்தால் அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் வரை ஆனது. நிறைய வேலைப் பாடுகளையும் செய்திருந்தேன். அடுத்து கின்னஸ் சாதனைக்காக 100 அடி நீள கூந்தலை உருவாக்க வேண்டும்''-என்கிறார்.
இவரது பிரண்ட்ஸ் பிïட்டி கேர் என்ற அழகு நிறுவனம் மேற்கு மாம்பலத்தில் உள்ளது. ஜடை அலங்காரத்தில் சாதனை செய்வது மூலம் பெண்களிடம் கூந்தல் பராமரிப்பில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று வாசுகி நம்புகிறார்.
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.