Pages

Friday, April 30, 2010

லட்சுமிராய்க்காக, வாலி எழுதிய பாடல்

முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி கதை-வசனத்தில் வளர்ந்து வரும் படம், `பெண் சிங்கம்.' இந்த படத்தில், உதயகிரண்-மீராஜாஸ்மின் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
 
படத்தில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் இணைந்து நடனம் ஆடும் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ``அடி, ஆடி அசையும் இடுப்பு-சோறு ஆக்கி வைக்கும் அடுப்பு...அட, ஏண்டி அதுக்கு உடுப்பு?-அதை எடுக்க சொல்லு விடுப்பு...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு, தேவா இசையமைத்து இருக்கிறார்.
 
இந்த பாடல் காட்சிக்காக, சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு பெரிய குடோனில் மூன்று பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் ஆடிப்பாடுவது போல் 4 நாட்கள் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.
 
`பெண் சிங்கம்' படத்தில் வேலு நாச்சியாரின் ஓரங்க நாடகமும் இடம்பெறுகிறது. வேலுநாச்சியாராக மீராஜாஸ்மின் நடித்த காட்சி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள கலையரங்கில் படமாக்கப்பட்டது.
 
கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பு வளையத்தில் உதயகிரணும், ராதாரவியும் மோதுகிற சண்டை காட்சி ஒன்றும் சமீபத்தில் படமானது.
 
இந்த படத்துக்காக கலைஞர் கருணாநிதி எழுதிய ``ஆகா! வீணையில் எழுவது வேணுகானமா? திருவாவடுதுறையின் தோடி ராகமா? திருவெண்காட்டு மகுடி நாதமா?'' என்ற பாடலும், கவிஞர் வைரமுத்து எழுதிய ``நீ சொன்னால் தேய் பிறை வளரும்...நீ தொட்டால் தீப்பொறி மலரும்'' என்ற பாடலும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படுகின்றன. அத்துடன், `பெண் சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
 
ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் என்.ஜெயமுருகன், ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் ஆகிய இருவரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் விவேக், ரிதீஷ் எம்.பி, சுதர்சனாசென், ரம்பா, ரோகிணி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மதன்பாப், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விஜய் ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், பார்த்திபனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவருமான பாலி ஸ்ரீரங்கம் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

1 comments:

ரோஸ்விக் said...

அண்ணே! கொஞ்சம் படிக்க நேரம் கொடுங்க. :-)
இப்புடி மூச்சுத்திணற திணற அடிச்சா எப்படி தலைவா படிக்கிறது?? :-)

kindly remove the word verification also.

நல்லமுறையில் எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.... இந்தப் பின்னூட்டம்.

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.