Pages

Saturday, April 10, 2010

கல்கி பகவானிடம் விசாரணை நடத்த ஆந்திரா கோர்ட் உத்தரவு

கல்கி பகவானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திரா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் தன்னை கடவுளாக கூறி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

அவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தன்னை அம்மா பகவான் என்றும் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார். இருவரும் தரிசனம் மற்றும் பாத பூஜைக்காக ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் கூறப்பட்டது.

மேலும் கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதை பிரசாதம் கொடுத்து ஆட வைப்பதாக மனித உரிமை ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டியிடம் பக்தர்கள் புகார் அளித்தனர்.

ஏழை எளிய மக்களுக்கு அரசு அளித்த நிலம், வனத்துறைக்கு சொந்தமான நிலம் போன்றவற்றை கல்கி பகவான் ஆக்கிரமித்து மோசடி செய்ததாக ஐதராபாத் கோர்ட்டில் 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஏழைகள் வனத்துறை நிலங்களை மோசடி செய்ததாக கல்கி பகவான் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுவரை போலீஸ் அதிகாரிகள் கல்கி பகவானிடம் விசாரணை நடத்தாதது ஏன்? வருகிற 23 ந் தேதிக்குள் போலீசார் கல்கி பகவானிடம் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கல்கி பகவான் ஆசிரம ஊழியர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்
GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.