போலீசாருக்கும், சமீரா ரெட்டிக்கும் சண்டை மூள்வது தொடர்கதையாகிறது. எற்கனவே மலேசியா போலீசாருடன் மோதி லிப்டில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இப்போது மும்பை போலீசார் மீது தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறியுள்ளார். இதுபற்றி சமீராரெட்டி அளித்த பேட்டி வருமாறு:-
மும்பையில் இருந்து சாந்தா குரூஸ் போலீஸ் நிலையத்துக்கு காரில் சென்று கொண்டு இருந் தேன். விமான நிலையம் அருகில் எனது காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். நான் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தினர். ஆனால் உண்மையில் நான் செல்போனில் பேச வில்லை. செல்போனில் இருந்து வந்த பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன். தப்பாக நினைத்து என்னை பிடித்து விட்டனர். அவர் களிடம் செல்போனில் பேசவில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அபராதத்தை கட்டி ரசீது வாங்க தயாரானேன். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. என்னிடம் லஞ்சம் கேட்டனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நான் நடிகை என்பதை கண்டு பிடித்து என் காரை சூழ்ந்து கொண்டனர். இதனால் போலீசாரால் லஞ்சம் வாங்க முடியவில்லை. வேறு வழியின்றி என்னை போக விட்டனர்.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.