சென்னை : நளினி, தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று 19 ஆண்டுகாலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி. தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அறிவுரைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் நளினியை விடுவிக்க தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தன்னை விடுவிக்குமாறு நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. |
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.