Pages

Tuesday, April 6, 2010

ஆயிஷாவிடம் 1 1/2 மணி நேரம் விசாரணை



சானியாமிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து ஆயிஷா என்பவர் சோயிப் என் கணவர் என்றும், தான் கர்ப்பம் அடைந்துள்ளேன் என்றும் புகார் தெரிவித்தார்.

ஆயிஷா கர்ப்பம் ஆனதாக கூறியது பற்றி சோயிப்பிடம் கேட்டதற்கு, ’’சோயிப் மூலம் அவர் கர்ப்பமானதாக யார் சொன்னது? நான் சிலவற்றை கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற புகார்களை திரைமறைவில் இருந்து அவர் கூறுவது ஏன் என்று எனக்கு தெரியாது. அவர் (ஆயிஷா) எங்கு இருக்கிறார்? 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 18 வயதுதான். அவருடைய வயதை கண்டுபிடியுங்கள்’’ என்று சோயிப் பதில் அளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ’’ஆயிஷாவுடன் நடந்த திருமணம் செல்லத்தக்கது அல்ல. இந்த விவகாரத்தை கோர்ட்டின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். தனக்கு திருமணம் நடந்தது குறித்து சட்டப்படி கோர்ட்டில் அவர் முதலில் நிரூபிக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் முதல் மனைவி எனக்கூறப்படும் ஆயிஷாவிடம் ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.


திருமண ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஐதராபாத்தில், சோயிப் மாலிக்-ஆயிஷா இடையிலான சந்திப்புகள் குறித்த தகவல்களை போலீசார் கேட்டறிந்தனர். ஆயிஷாவுக்கு சோயிப் மாலிக் அளித்த நினைவுப்பரிசுகள் குறித்த விவரங்களையும் கேட்டனர். இந்த விசாரணை, 1 1/2 மணி நேரம் நீடித்தது

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.