மும்பை இந்தியன், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி, நேற்று முன் தினம் மும்பையில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, முதல் 17 ஓவர்களுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதற்குப் பின் களமிறங்கிய ஹர்பஜன், 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களும் அடங்கும். ஹர்பஜன் அதிரடியால் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
இது குறித்து ஹர்பஜன் பேசும்போது, டெக்கான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன் குவித்தது மகிழ்ச்சி அளித்தது. இப்போட்டியில் சச்சினின் "பேட்டை` பயன்படுத்தி ஆடினேன். இதற்கு அனுமதி அளித்த சச்சினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐ.பி.எல்., அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அசத்தி வருகிறார். கிரிக்கெட்டின் எந்த பரிமாணமாக இருந்தாலும், சச்சின் சிறப்பாக விளையாடும் திறமை பெற்றவர். அவர் "டுவென்டி-20` உலககோப்பை தொடரிலிருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது. சர்வதேச அளவில் இவ்வகை போட்டிகளில் சச்சின் மீண்டும் பங்கேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்பஜனுக்கு அபராதம்
மும்பையில் நடந்த போட்டியில், ஹர்பஜனுக்கு, ஐ.பி.எல்., நிர்வாகம் ரூ. 6.75 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இப்போட்டியில் சுமனை "கேட்ச்` செய்து அவுட்டாக்கிய ஹர்பஜன், அவர் மனம் புண்படும் வகையில் திட்டியுள்ளார். இது விதிமுறைப்படி குற்றமாகும். இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.