Pages

Monday, April 19, 2010

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் செம்மொழி மாநாட்டுப் பாடல் தயார்!



ஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, உலகத் தமிழ் செம்மாழி மாநாட்டுப் பாடல் குறுந்தகட்டை முதல்வர் கருணாநிதி வரும் மே மாதத்தில் வெளியிடுகிறார்.
உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் மாநாட்டுப் பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியிருந்தார். இந்த பாடலுக்கு இசையமைக்கும் படி ஏ.ஆர். ரஹ்மானை அவர் கேட்டிருந்தார். இதற்கு . ரஹ்மானும் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செம்மொழி மாநாட்டு பாடலுக்கான இசையமைக்கும் பணியை ரஹ்மான் முடித்துள்ளார். இதையடுத்து சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் வகையில் உள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. கனிமொழி எம்.பி. மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.
இப் படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல்வர் கருணாநிதி தலைமையில் மே மாதம் மத்தியில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் இப் பாடல் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த குறுந்தகடு திரையிடப்படும். அதேபோல தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் கிராமங்கள்தோறும் திரையிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது

GIF animations generator gifup.com
GIF animations generator gifup.com

0 comments:

Post a Comment

வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.