இனி பயந்து பயந்து மியாவ்...னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை சுரீர்ன்னு சொல்ல ஒரு பேக் ரவுண்டை அமைத்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு. அநாதை குழந்தைக்குதான் அங்கங்கே அடிவிழும். அரசியலில் சேர்ந்திட்டா? காங்கிரசில் சேரப்போகிறாராம்! தற்போது லண்டனில் இருக்கிற குஷ்பு அங்கிருந்தபடியே ஒரு அஸ்திரத்தை ஏவியிருக்கிறார். "எனக்கு காங்கிரஸ் கட்சி மேல பெரிய அபிமானம் உண்டு. அதனால் சென்னை வந்ததும் கலந்து பேசி காங்கிரஸ்ல சேரலாம்னு இருக்கேன்" இதுதான் குஷ்பு போட்ட புதுக்கோலம். குது£கலம்தான் தொண்டர்களுக்கு. "அன்னை சோனியாவின் தலைமையை ஏற்க யார் முன்வந்தாலும் அவங்களை முழு மனசோடு வரவேற்போம்" என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும். தமிழகத்தில் மேல்சபை வருவததாக அறிவிப்பு வந்த நாளில் இருந்தே குஷ்புவுக்கும் அதில் இடம் உண்டு என்ற வதந்திகள் உலவ துவங்கின. இப்போது வதந்தி உண்மையாகும் நிலை வந்திருக்கிறது. ஆக, சத்தியமூர்த்தி பவனுக்குள் மேலும் ஒரு கோஷ்டி! |
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.