
மத விஷயத்தில் விஜய்யா இருந்தா என்ன? அஜய்யா இருந்தா என்ன? கொடி து£க்கணும்னு முடிவு பண்ணிட்டா தயங்காத குரூப் ஒன்று தமிழ்நாட்ல இருக்கு. அதுவும் சினிமா ஆளுங்க என்றால் கண்ணிலே லென்ஸ் மாட்டிக் கொண்டு பார்க்கிற விஷயத்தில இந்து மக்கள் கட்சிக்கு இணை அதுவேதான். இந்த கட்சியின் பிரமுகர் கண்ணன் என்பவர் புது பிரச்சனை ஒன்றை கிளப்பியிருக்கிறார். விஜய் புதிதாக நடிக்கவிருக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. முதல் நாள் பூஜை புனஸ்காரங்களோடு படப்பிடிப்பை துவங்கினார்கள். திருவிடை மருது£ரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அர்ச்சனை செய்ய முடிவெடுத்த படக்குழு ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் சகிதம் அங்கு வந்திருந்தது. கூடவே விஜய்யின் தஞ்சை மாவட்ட ரசிகர்களும்! தாங்காத கூட்டத்திலும், ஓங்கார மந்திரத்தை உச்சரித்த அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம். இதுதான் கண்ணனின் குற்றச்சாட்டு.
விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம் என்பது அவரது வாதம்.
அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது என்கிறார் ஆவேசமாக.
கத்திகிட்டே இருக்குமாம் ராக்கோழி. கண்டுக்காம கெடக்குமாம் இருட்டு!
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.