என் கண்களில் அழுது அழுது கண்ணீரும் வற்றிப் போயிற்று.....
ஆண்டாண்டு காலமதாய்
இப்பூமியிலே அவதரிக்கும்
மானிடவர்க்கம்தான்
நான்!
பிறந்தது முதல்
இன்று வரை
கிடைத்த பட்டம்
"அகதி''
என்றோ ஒரு நாள்
விடிவு வரும் என்ற நம்பிக்கையில்
என் உடம்பில்
உயிர் மட்டும்
ஊசலாடுகிறது
"அகதி'' வாழ்கையிலே
குடிக்க நீரில்லை என்று
கண்ணீர் கூட விட முடியவில்லை
ஏனெனில்! என் கண்களில்
அழுது அழுது
கண்ணீரும் வற்றிப் போயிற்று.....
நன்றி-மு.ஆ. சுமன் வல்வை சிதம்பரக் கல்லூரி
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.